கொரொனா வைரஸ் பரவ உலக சுகாதார அமைப்பு காரணமா. ? சீனாவிடம் பணம் பெற்றது தான் இதற்கு காரணமா.!? அதிர வைக்கும் உண்மைகள் இதோ…!!
கொரோனா வைரஸ் 203 மூன்று நாடுகள் வரை பரவி மனித உயிர்களை பறித்து வருகிறது. இதனை தடுக்க ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள் ஆகியோர் போராடி வருகின்றனர். இத்தனை போராட்டத்தை உலக நாடுகள் அனுபவித்து வரும் நிலையில் ஆரம்பித்து வைத்த சீனா மட்டும் அமைதியாக தனது அன்றாட பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இதனால் ஒட்டுமொத்த உலக நாடுகளும் சீனா மீது குற்றம் சுமத்தி வந்த நிலையில் தற்போது பலரது பார்வை சர்வதேச பொது சுகாதார அமைப்பு மீது விழுந்துள்ளது. டிசம்பர் மாதம் கொரொனா வைரஸ் கண்டுபிடிக்கப் பட்ட நிலையில் ஜனவரி 22 ம் திகதி WHO அமைப்பின் ட்ரைக்டர் ஜெனரல் Tedros Adhanom அவர்கள் சீன ஜனாதிபதி Xi Jumping அவர்களை சந்திந்தார்.
அங்கு கொரோனா வைரஸ் பற்றி பேசியதுடன் சீனா ஜனாதிபதியை பாராட்டி இருந்தார். அதன் பின் மீடியாக்களுக்கு பேட்டியளித்த இவர் சீனா உயரிய எண்ணம் கொண்டது என்றும். சீனா நினைத்திருந்தால் கொரொனா வைரஸ் பற்றிய தகவல்களை மறைத்திருக்கலாம் என்றும் கூறியதுடன் சீனாவின் கொரொனா வைரஸ் தடுக்கும் முயற்சிகளை பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.
அதன் பின் கொரோனா வைரஸ் வேகமாக பரவ ஆரம்பித்தது. ஜனவரி 30ம் திகதி உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. அப்போதும் Tedros அவர்கள் சீனாவை பாராட்டுவதில் குறியாக இருந்தார்.சீனாவை பார்த்து மற்ற நாடுகள் கற்றுக் கொள்ள வேண்டும் என அறிவித்தார்.
இவரது சீனா புராணங்கள் மற்றைய நாடுகள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியது. உலகையே கொரோனா ஆள ஆரம்பித்த பின் மார்ச் 11ம் திகதி கொரொனா வைரஸ் ஒரு தொற்று நோய் என உலக WHO அறிவித்தது. அதுவரை சீனாவின் புகழாரம் பாடிக்கொண்டிருந்துவிட்டு அதன் பின்னரே மக்கள் நலன் பற்றி சிந்திக்க தொடங்கியது..
இது பல நாடுகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. சீனாவிடம் இருந்து WHO பணம் பெற்றுக் கொண்டதா என்ற கேள்வி எழுந்த போது இந்திய பிரதமர் மோடி, மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் ஆகியோர் வெளிப்படையாகவே WHO மீது குற்றம் சுமத்தினார்கள். இது பற்றிய முழு விபரங்கள் கீழ் உள்ள வீடியோவில் உள்ளது…!