கொரோனா வைரஸ் எப்போது உலகத்தை விட்டு முற்றிலும் அழியும்.!? எப்படி அழியும். ? சுகாதார அமைப்பு மக்களுக்கு வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி..! அதிகம் பகிருங்கள்…!!
கொரொனா வைரஸை ஆரம்பத்தில் கட்டுப் படுத்த முடியாததன் விளைவு இன்று உலகம் முழுவதும் பரவி அனைவரும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். இதனை எப்படி அடியோடு அழிக்க முடியும், எப்போது அழியும் என்பது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு சில விடயங்களை வெளியிட்டுள்ளது. இதில் முதலாவதாக இருப்பது மக்கள் ஆரோக்கியமான பழக்க வழக்கங்களுக்கும் உணவுக்கும் மாற வேண்டும்.
ஒவ்வொருவரும் தங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள வேண்டும். இப்படி செய்வதன் மூலம் கொரோனாவால் மனிதனை நெருங்க முடியாமல் போகும்.2 ) கொரோனாவிற்கான நோய் தடுப்பு மருந்துகள் பற்றியும் வைத்திய ஆலோசனைகள் குறித்தும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தடுப்பு ஊசிகள் வழங்கப் பட்டால் கண்டிப்பாக அதனை போட்டுக் கொள்ள வேண்டும்.
3.) தொற்று நோய் தடுப்பு மருந்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப் பட வேண்டும். பெரும்பாலும் மற்ற நோய்களுக்கு இருக்கும் அளவு மருத்துவர்கள் தொற்று நோய் தடுப்புக்கு என்று இருப்பதில்லை. அதனால் தொற்று நோய் பற்றி தேர்ச்சி பெற்ற வைத்தியர்கள் அதிகரிக்கப் பட வேண்டும். 4.) தங்களுக்கு நோய் அறிகுறிகள் தென்படும் போது தங்களை தாங்களே தனிமை படுத்திக் கொள்ள மக்கள் முன்வர வேண்டும்.
இப்படி செய்வதனால் 14 நாட்களின் பின் உறுதி செய்யப் பட்டாலும் பாதிக்கப் பட்டவரால் வேறு ஒருவருக்கு நோய் தொற்று ஏற்படாது. அதனால் கொரோனா தொற்று குறைந்து விடும். 5.) தொற்றுக்கள் குறையும் போது கொரோனா முற்றிலும் அழிவை நோக்கி சென்றுவிடும். அதன் பின் கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்டு விடலாம்.
இவை அனைத்தும் பின்பற்றப் படும் பட்சத்தில் சுமார் ஒன்று தொடக்கம் இரண்டு வருடத்திற்குள் கொரோனா வைரஸ் என்ற ஒன்று உலகில் இருக்கவே இருக்காது. இதனை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என சுகாதார அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது…!!