கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக ஈரான் மற்றும் இத்தாலியிலும் 5 பேர் உயிரிழப்பு..!!
சீனாவில் கோர தாண்டவமாடும் கொடிய உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. அந்த வகையில், ஈரான் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக ஈரானில் 4 பேர் உயிரிழந்த நிலையில் இத்தாலியில் முதல் உயிரிழப்பாக 78 வயதுடைய முதியவரின் இறப்பு அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் ஈரானில் அனைத்து நகரங்களிலும் வைரஸ் பரவியிருக்கலாம் என அந்நாட்டின் சுகாதர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத்தாலியில் ஒருவர் உயிரிழந்த நிலையில் ஒரே நாளில் 16 பேர் இந்த வைரஸ் தொற்றுக்குள்ளமை உறுதி செய்யப்பட்ததாக அந்நாட்டு சுகாதார அமைச்சின் அறிவித்தலின் படி, பாடசாலைகள், அலுவலகங்கள்,மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் போன்றவை கொரோனா வைரஸ் பாதித்த பகுதிகளில் நிறுத்தப்படவேண்டும் என அறிவிக்க்ப்பட்டுள்ளது. அதற்கு இடையில் கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,345 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் ஹூபே மாகாணமான திம்பிரிகாயாவில் மட்டும் 106 உயிரிழப்பு பதிவாகியுள்ளன. இங்கு 366 புதிய நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளனர்.
கொடிய கொரோனா வைரஸ் தொற்று அதிகளவில் பரவியுள்ள நாடாக தற்போது தென்கொரியா அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு இருவர் மரணமடைந்துள்ளதுடன் 346 பேர் தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்டுள்ளது. சீனாவுக்கு வெளியே 26 நாடுகளில் இந்த தொற்று பரவியுள்ளமை கண்டறியப்படுள்ளது. அதில் எண்மர் உயிரிழந்துள்ளதுடன் 1,152 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் புதிய கொரோனா வைரஸ் தொற்று பல நாடுகளில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.