கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஈரான் நாடாளுமன்ற பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு..!!
கொடிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஈரான் நாடாளுமன்ற பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக சட்டமன்றத்தின் செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஈரானிய சட்டமன்றத் செய்தித் தொடர்பாளரான அசாதுல்லா அப்பாஸி தகவல் தெரிவிக்கையில், மேலதிக அறிவிப்பு வரும் வரை நாடாளுமன்றம் எந்த அமர்வுகளையும் நடத்தாது என்று தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் சீனாவுக்கு வெளியே அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஈரானும் ஒன்றாகும். அங்கு மக்களின் நடமாட்டம் பொது இடங்களில் வெகுவாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், வைரஸ் தொற்றை சமாளிக்க முயற்சிக்கும் பணிக்குழுவிற்கு தலைமை தாங்கிய ஒரு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பிரதி சுகாதார அமைச்சர் ஈராஜ் ஹரிர்ச்சி உட்பட நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொரானாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இருப்பினும் ஈரானில் கொரோனா வைரஸ் தொடர்பாக உயிரிழந்தவர்கள் 34 ஆக பதிவாகியுள்ளமை சுட்டிக்காத்தக்கது.