தாடி, மீசை உள்ளவர்களை அதிகம் தாக்குமாம் கொரோனா வைரஸ்..! அதிரவைக்கும் அமெரிக்க ஆய்வு..!!!
உலகம் முழுவதும் கோர தாண்டவமாடும் கொடிய உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் தாடி வைத்து இருப்பவர்களை தாக்குவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக அமெரிக்காவில் நடத்திய ஆய்வு ஒன்று கூறப்படுகின்றது.
தாடி வைத்திருப்பவர்கள் அதனை உரிய முறையில் பராமரிக்க வேண்டியது அவசியமாகும். அப்படி இல்லை என்றால், பாக்டீரியா தொற்று ஏற்பட்டு அரிப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படக்கூடும். இந்நிலையில், கொரோனா வைரஸ் பீதி உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்து வரும் நிலையில், தாடி வைத்து இருப்பவர்களை அது அதிகமாக தாக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
நாம் முகமூடிகள் அணிந்து கொண்டு சென்றாலும் கூட கொரோனா வைரஸ் தொற்றை தாடியும், மீசையும் எளிதாக்குகின்றது என அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு பிரிவு துறையினர் மேற்கொண்ட ஆய்வில் கூறுகின்றனர். ஆகவே, கொரோனா வைரஸ் முற்றிலுமாக தடுக்கப்படும் வரை கிளீன் ஷேவ் செய்து கொள்வது நல்லது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.