சீனாவை விட பல மடங்கு இத்தாலியில் ஏற்படும் மரணம்..!
கொடிய கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய சீனாவில் ஏற்பட்ட மரணங்களை விடவும் இத்தாலியில் அதிக மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் வரையில் இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றினால் 3405 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினம் மாத்திரம் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக 427 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 41ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும் சீனாவில் இது வரையில் இந்த நோயினால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 3245 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சர்வதேச ரீதியாக இந்த நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9ஆயிரமாக உயர்ந்துள்ளது. 220 ஆயிரம் பேர் இந்த தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். நேற்றைய தினம் மட்டும் ஸ்பெயினில் 209 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பலியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.