பிரேசில் ஜனாதிபதியின் கொரோனா தொடர்பான டிவிட்டர் பதிவு நீக்கல்!
உலகையே அச்சுறுத்தி வருகின்ற கொடிய கொரோனா நோய் தொடர்பான கட்டுக்கதைகளை பரப்புவதாகக் கூறி, பிரேசில் ஜனாதிபதி ஜாயிர் போல்சனாரோவின் விடியோவை டிவிட்டரும் பேஸ்புக்கும் நீக்கியுள்ளன. கொரோனா நோய் தொற்று சாதாரண காய்ச்சல் தான். அதற்காக சமூக இடைவெளி தேவையில்லை. மக்கள் தனித்திருப்பதை கைவிட வேண்டும் என்று பிரேசில் ஜனாதிபதி கூறிய விடியோவை டிவிட்டர் நீக்கியுள்ளது.
அதே போல், கொரோனா வைரஸை கண்டு அஞ்ச வேண்டாம். Hydroxychloroquine எனும் மருந்தை பயன்படுத்தினால் போதும் என்று அவர் பேசிய வீடியோவை டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்ட்டாகிராம் ஆகியவை நீக்கியுள்ளன. (இந்த மருந்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் பரிந்துரைத்தார். ஆனால், அமெரிக்காவின் மருத்துவ முகமை CDC இதற்கு ஆதாரமில்லை என நிராகரித்து விட்டது)
கொரோனா வைரஸ் தொடர்பான தவறான தகவல்களை பிரபலங்களே பரப்பினால், அதனால் மிகப்பெரிய ஆபத்துகள் நேரும் என்பதால், பிரபலங்களின் கொரோனா fake news பதிவுகள் நீக்கப்படும் என்று டிவிட்டரும் பேஸ்புக்கும் அறிவித்துள்ளன. இந்தியாவில் நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டர் பதிவும் அவ்வாறு நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.