கொரோனா வைரஸ் பரவுவதற்கு 5ஜி தொழில்நுட்பம் தான் காரணமா???
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு 5ஜி தொழில்நுட்பம் தான் முக்கிய காரணம் என்ற வதந்தியால் பிரித்தானியாவில் 20க்கும் மேற்பட்ட செல்போன் கோபுரங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
பிரித்தானியாவில் கொடிய கொரோனா வைரஸ் தொற்றால் 6,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், அங்கு சில தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5ஜி தொழில்நுட்பச் சேவையை தொடங்கி உள்ளன. அதே நேரத்தில் 5ஜி நெட்வொர்க், கொரோனா வைரஸ் தொற்று மேலும் அதிகரிப்பதாக பிரித்தானியாவில் சர்ச்சை குரிய ஒரு வதந்தி கிளம்பியதுள்ளது. இதன் காரணமாக லிவர்பூல், வெஸ்ட் மிட்லேண்ட் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட செல்போன் கோபுரங்களை மக்கள் தீ வைத்து எரித்துள்ளனர்.
தொலைத்தொடர்பு நிறுவன என்ஜினீயர்களையும், ஊழியர்களையும் பொதுமக்கள் குறிவைத்து தாக்கி வருகின்றனர். இதன் இடையில் கொரோனா வைரஸ் பரவலுடன் 5ஜி நெட்வொர்க்கை தொடர்புபடுத்துவதற்கு விஞ்ஞான ரீதியாக எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.