உலக சுகாதார நிறுவனத்திற்கு வழங்கப்படும் நிதியை ரத்து செய்யப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி மிரட்டல்..!!
கொடிய கொரோனா வைரஸ் தொற்று விவகாரத்தில் WHO எனப்படும் உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு ஆதரவாக வழங்குவதாக குற்றம் சுமத்தியுள்ள அமெரிக்கா ஜனாதிபதி டோனால்ட் டிரம்ப் அதற்கு வழங்கப்படும் நிதியை ரத்து செய்யப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு மிரட்டல் விடுத்த அவர், கொரோனா வைரஸ் தொடர்பாக பல தகவல்கள் முன்னரே வெளிவந்தாலும் அவற்றை எல்லாம் உலக சுகாதார நிறுவனம் அலட்சியப்படுத்தி விட்டதாக தெரிவித்தார். சீனா மீது பயணத் தடை விதிக்க வேண்டும் என தாம் கூறிய போது அதை ஏற்காமல் உலக சுகாதார நிறுவனம் பெரிய தவறு செய்து விட்டது என்று டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். டிரம்பின் குற்றச்சாட்டை உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் Dr. Tedros Adhanom Ghebreyesus’ மறுத்துள்ளார். சர்வதேச அமைப்பான WHO சீனாவின் கைப்பொம்மையாக மாறிவிட்டது என டிரம்ப் கூறுவது அடிப்படை ஆதாரமற்றது என அவர் தெரிவித்துள்ளார்.
Videos & Video Copyrights Owned By: Polimer News