காசநோய் தடுப்பு மருந்து பயன்படுத்தி வரும் நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் 6 மடங்காக குறைவு..!!
கடந்த சில நூற்றாண்டுகளாக காசநோய் தடுப்பு மருந்து பயன்படுத்தி வரும் நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் 6 மடங்கு குறைவாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பி.சி.ஜி தடுப்பூசி எனப்படும் காசநோய்க்கான இந்த மருந்தில் வேறு பல நன்மைகளும் அடங்கியுள்ளது தற்போது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. வெறும் 30 பவுண்டுகள் கட்டணத்தில் அளிக்கப்பட்டு வந்த இந்த பி.சி.ஜி தடுப்பூசியால் 60 வருடங்கள் வரை காசநோயில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
இந்த தடுப்பூசியால் தற்போது சுவாச நோய்களிலிருந்தும் பாதுகாப்பு கிடைப்பதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மட்டுமின்றி இதை உலக சுகாதார அமைப்பும் அங்கீகரித்துள்ளது. பிரித்தானியாவை பொறுத்த வரை பாடசாலை மாணவர்களுக்கு 1953 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை பி.சி.ஜி தடுப்பூசி கட்டாயமாக அளிக்கப்பட்டு வந்துள்ளது.
பிரித்தானியாவில் காசநோயானது பெருமளவு குறைந்தது. ஆனால் அதன் பின்னர் மொத்தமாக அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசி வழங்குவதற்கு பதிலாக தேவை இருப்போருக்கு மட்டும் வழங்கும் நிலை 2005 ஆம் ஆண்டு முதல் கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் முதல் 50 நாடுகளை ஆய்வு செய்ததில், இந்த தடுப்பூசி காலாகாலமாக பயன்படுத்தி வரும் நாடுகளில் கொரோனாவால் இறப்பு வீதம் மிகவும் குறைவாக காணப்பட்டது என்ற உண்மை வெளியானது.
அதுவும் சுமார் 6 மடங்கு அளவுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் பி.சி.ஜி தடுப்பூசி பயன்படுத்தி வரும் நாடுகளில் குறைவாக காணப்பட்டுள்ளது. தற்போது அதே பி.சி.ஜி தடுப்பூசியை மீண்டும் கொரோனா வைரசுக்கு எதிராக பயன்படுத்த முடியுமா என்ற ஆய்வில் இறங்கியுள்ளனர் ஆய்வாளர்கள். கடந்த மாதம் அவுஸ்திரேலியாவில் 4,000 சுகாதார ஊழியர்களுக்கு பி.சி.ஜி தடுப்பூசி அளிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் சாதகமான முடிவு வரும் என்றே ஆய்வாளர்கள் தற்போது நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.