கிறிஸ்துமஸ் தினத்தன்று பெற்ற குழந்தைகளின் கண் முன்னே மனைவியை குத்திக்கொலை செய்த கணவன்..!!! அமெரிக்காவில் அரங்கேறிய கொடூரம்..!!
கிறிஸ்துமஸ் தினத்தன்று பெற்ற குழந்தைகள் கண் முன்னே மனைவியை குத்திக்கொலை செய்த கணவனின் கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் அமெரிக்காவின் Olney பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து அதிகாலை 3.30 மணியளவில் பெண் ஒருவர் அலறும் சத்தம் கேட்டுள்ளது. அதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கினார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த பொலிஸார், கதவை திறந்து கொண்டு உள்ளே சென்ற போது, 35 வயதுடைய பெண் ஒருவர் கத்திக்குத்து காயங்களுடன் தரையில் கிடந்தார்.
பொலிஸார் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டாதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், வீட்டிற்குள் நுழைந்த போது, பாதிக்கப்பட்ட பெண் கத்திக்குத்து காயங்களுடன் நினைவில்லாமல் கிடந்தார். 41 வயதுடைய அவருடைய கணவர் கையில் காயத்துடன் நின்றுகொண்டிருந்தார்.
மேலும் இந்த சம்பவமானது தம்பதியினரின் 6 குழந்தைகளின் கண்முன்னே நடந்துள்ளது. அதில் 14 வயதுடைய சிறுவனின் தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டிருந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவன் தற்போது நல்ல நிலையில் உள்ளான் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பாக, தம்பதியினரின் குழந்தைகளிடம் நேர்காணல் நடத்தி வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.