அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையம்..!!
அமெரிக்காவிலுள்ள சிறைச்சாலைகளில் கொடிய கொரோனா வைரஸ் தொற்று சமூக தொற்றாக மாறி வருவதாக, ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையம் எச்சரித்துள்ளது.
அமெரிக்காவில்லுள்ள சிறைச்சாலைகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சிறைச்சாலை வளாகங்களில் நிலவும் கூட்ட நெரிசல் மற்றும் சுகாதாரமற்ற சூழலால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். அதையடுத்து ஒரு சில சிறைச்சாலைகளில், கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க மாகாண அரசுகள் முடிவு செய்துள்ளன.