Long March 5B எனும் ராக்கெட்டை விண்வெளிக்கு அனுப்பி பரிசோதனை மேற்கொண்ட சீனா..!!
2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடைப்பகுதியில் சீனாவில் கொரோனா வைரஸ் பரவ தொடக்கி தற்போது உலகின் பல நாடுகளிலும் கோர தாண்டவம் ஆடி வருகின்றது. தற்போது சீனாவில் கொரோனா வைரஸின் பாதிப்பு பெருமளவில் குறைந்து காணப்படுகின்றது. இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி சீனா பல்வேறு வெளிநாட்டு முதலீடுகளைச் செய்வதில் ஆர்வம் காட்டி வந்தது. அதேபோல் நேற்று ராக்கெட் மாதிரி ஒன்றை விண்வெளிக்கு அனுப்பி பரிசோதனை முயற்சி ஒன்றினையும் மேற்கொண்டுள்ளது. விண்வெளி வீரர்களை நிலவிற்கு அனுப்பும் முயற்சியாகவே இப் பரீட்சிப்பு நடைபெற்றுள்ளது.
Long March 5B எனும் இந்த ராக்கெட் ஆனது Wenchang ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அத்துடன் அதில் இணைக்கப்பட்டுள்ள மீண்டு வரக்கூடிய கப்சூல் (capsule) பகுதியானது எதிர்பார்த்ததைப் போன்று வெற்றிகரமாக ராக்கெட்டிலிருந்து பிரிந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேநேரம் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு நிலவிற்கு விண்வெளி வீரர்களை அனுப்புவதற்கு சீனா எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.