இளம் பெண்ணுக்கு முத்தம் கொடுத்து ஆபாசமாக நடந்து கொண்ட நபர் கைது..!!இது எந்த நாட்டில் நடந்தது தெரியுமா?
ஈரானில் கொடிய கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எந்தவொரு சுகாதார அறிவுத்தல்கள் எதுவும் இல்லாமல், அதற்கான தகுந்த உபகரணங்கள் எதுவும் இல்லாமல் 28 வயதுடைய Alireza Japalaghy என்பவர் கட்டிடங்களில் ஏறி ஒரு கட்டிடத்தில் இருந்து இன்னொரு கட்டிடத்திற்கு தாவும் விளையாட்டை விளையாடுபவர். அப்படி ஏறும் உயரமான கட்டிடங்களின் உச்சியில், அபாயகரமான கோணத்தில் நின்ற படியும், படுத்தபடியும் Japalaghy பெண் ஒருவரை முத்தமிட்டுள்ளார்.
அந்த ஆபாச காட்சிகள் அடங்கிய புகைப்படங்களும் வீடியோக்களும் கடந்த வாரம் இணையத்தில் வைரலாகிது. டெஹ்ரான் சைபர் பொலிஸார் Japalaghyயைக் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கடும் கட்டுப்பாடுகள் கொண்ட நாடான ஈரானில் ஆபாசமாக நடந்து கொண்டதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதோடு, பெண்களைப் பொருத்தவரை அவர்கள் தங்கள் முகம், கைகள் மற்றும் பாதங்கள் தெரியும் வகையில் மட்டுமே உடையணியலாம் என்பதால், Japalaghyயுடன் இருந்த அந்த பெண்ணும் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.