வானுக்கும் கடலுக்கும் இடையில் புரட்டி எடுத்த புழுதி புயல்!
ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதிகளில் புழுதி புயல் வீசியுள்ளது. வானுக்கும் கடலுக்கும் இடையில் பழுப்பு நிற புழுதிக் காற்று வீசிய காட்சியை ஜெரால்டனில் வசிக்கும் கிறிஸ் லூயிஸ் என்ற புகைப்படக் கலைஞர் படம் பிடித்துள்ளார்.
புழுதிப் புயல் காரணமாக ஆஸ்திரேலியாவில் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட சேதத்தால், 50 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மின்சாரம் இன்றி பாதிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.