சமூக ஊடகங்கள் குறித்து டிரம்ப் எடுத்த அதிரடி நடவடிக்கை!
அமெரிக்க ஜனாதிபதி டோனால்ட் டிரம்ப்க்கு டிவிட்டர் நிறுவனத்துடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து சமூக ஊடகங்களை வரை முறைப்படுத்தும் புதிய சட்டத்தில் டிரம்ப் கையெழுத்திட்டார். அதன் மூலம் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசாங்கத்திற்கு கிடைக்கும் . கையெழுத்திட்ட பின்னர் தமது அலுவலகத்தில் இருந்து உரையாடிய டிரம்ப், அமெரிக்காவின் சுதந்திரமான பேச்சுக்கு உள்ள ஆபத்துகளை நீக்கவே இந்த உத்தரவு என்று விளக்கம் கொடுத்தார்.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் இரண்டு பதிவுகளை தவறானவை என்று ட்விட்டர் முத்திரை குத்தியதை தொடர்ந்து அமெரிக்க அரசாங்கத்திற்கும் டிவிட்டர் நிறுவனத்துக்கும் இடையில் மோதல் ஏற்பட்டன. தமது பதிவுகள் தவறாக வழிகாட்டுபவை எனக்கூறிய டிவிட்டர் நிறுவனம் மீது வழக்குத் தொடரப் போவதாகவும் டிரம்ப் எச்சரித்துள்ளார். மேலும் சமூக ஊடகங்களுக்கு வழங்கி வரும் விளம்பரங்களை குறைக்குமாறும் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.