கருப்பினத்தவரின் போராட்டம் காரணமாக அமெரிக்க ஜனாதிபதி டோனால்ட் டிரம்பை பாதாள அறையில் தங்க வைத்த அதிகாரிகள்..!!
அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு அருகே மாபெரும் போராட்டம் நடைபெற்றதை அடுத்து அந்நாட்டு ஜனாதிபதி டோனால்ட் டிரம்பை சிறிது நேரம் அதிகாரிகள் பாதுகாப்பாக பாதாள அறையில் வைத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் மின்னல் போலிஸ் நகரில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கழுத்தில் முட்டியை வைத்து அழுத்தியதால் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு என்பவர் இறந்துள்ளார்.
அதைக் கண்டித்து வெள்ளிக்கிழமை இரவு வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகே நூற்றுக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் இடம்பெற்ற போது பாதுகாப்பு கருதி ஜனாதிபதி டோனால்ட் டிரம்ப், அவர் மனைவி மெலனியா, மெலனியாவின் மகன் பேரன் ஆகியோரை ஜனாதிபதிக்கான பிரத்யேக பாதுகாவலர்கள் பாதாள அறைக்கு அழைத்துச் சென்று தங்க வைத்துள்ளனர். குறித்த போராட்டம் ஓய்வடைந்த பின்னர் ஒரு மணி நேரத்துக்குப் பிறகே அனைவரும் மேலே வந்ததாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறியுள்ளதாக நியூயார்க் டைம்ஸ், சிஎன்என் ஆகிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.