கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட பெண் சுகாதார பணியாளர் 9 வாரங்களுக்கு பிறகு பெற்ற மகள்களை சந்தித்தார்!
உயிரைக் குடிக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவலால் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கும் நிலையில் மருத்துவர்கள், தாதியர்கள் உள்ளிட்ட பலரும் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பல நாட்களாக தங்களது குடும்பத்தினரை பிரிந்து மக்களுக்காக பணிபுரிந்து வருகின்றனர். இரவு, பகல் பாராமல் பணியாற்றும் முன்களப் பணியாளர்களுக்கு மக்களும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இந்த நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த சுகாதார பணியாளர் ஒருவர் 9 வாரங்களுக்கு பிறகு தனது குழந்தைகளை சந்தித்து அன்பை பரிமாறியுள்ள சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. 43 வயதுடைய சுசிவாகன் என்பவர் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்தால் 9 வாரங்களாக வீட்டிற்கு வரவில்லை. அவருக்கு 7 வயது மற்றும் 9 வயது மகள்கள் இருந்ததால் கொரோனா வைரஸ் பரவல் அச்சத்தில் பணி செய்யும் இடத்திலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். மகள்கள் இரண்டு பேரும் சுசியின் தங்கை வீட்டில் தங்கி வந்தனர்.
அதைத் தொடர்ந்து பல வாரங்களுக்கு பின்னர் தன் மகள்களை சந்திக்க வந்த அவரை பார்த்த குழந்தைகள் சந்தோசத்தில் திகைத்து நின்றனர். அதன் பின்னர் கண்ணீர் மல்க தங்களது அம்மாவை ஆரத்தழுவி தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். இந்த உணர்ச்சிப்பூர்வமான காட்சியை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். தனது குழந்தைகளை பிரிந்து வாடியதாகவும், அவர்களை மீண்டும் சந்தித்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் சுசி வாகன் தெரிவித்துள்ளார். குடும்பத்தை பிரிந்து மக்கள் சேவையில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 9 வாரங்களாக குழந்தையை பிரிந்து இருந்தது எளிதான காரியம் இல்லை எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Just in case you missed it. Here’s the girls being reunited with Mummy after 9 weeks of being away so she could help save lives. Please feel free to share x pic.twitter.com/KhPGNAqwD8
— Charlotte Savage (@Lottsoflove21) June 2, 2020