பூமிக்கு அருகில் இன்றும் நாளையும் இரு விண்கற்கள் வந்து செல்லவிருப்பதாக நாசா அறிவிப்பு..!!
பூமிக்கு அருகில் இரு விண்கற்கள் இன்றும், நாளையும் வந்து செல்லவிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக நாசா விஞ்ஞானிகள் தெரிவிக்கும் போது, 2020 கே என் 5 என்று பெயரிடப்பட்ட விண்கல் 24 முதல் 54 மீட்டர் விட்டமுள்ளதாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றனர். குறித்த விண்கல் இன்றைய தினம் பூமிக்கு மிக அருகில், அதாவது, சுமார் 62 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் பூமியைக் கடந்து செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதையடுத்து 12 முதல் 28 மீட்டர் நீளமுள்ள 2020 கே ஏ 6 என்ற மற்றொரு விண்கல்லும் பூமியை நெருங்கியபடி செல்வதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.குறித்த விண்கல் நாளையும், நாளை மறுநாளும் பூமிக்கு அருகில் வந்து செல்லும் என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.