வயிற்று வலியால் துடிதுடித்த இளைஞனுக்கு மருத்துவனையில் காத்திருந்த பேரதிர்ச்சி!
சீனாவைச் சேர்ந்த 30 வயதுடைய நபர் ஒருவர் வயிற்று வழியால் துடிதுடித்து வந்தார். அவர் வயிற்று வலியை தாங்க முடியாமல் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு இடுப்புப் பகுதியில் எடுக்கப்பட்ட எக்ஸ் ரேயில் மீன் ஒன்று இருப்பதைக் கண்ட மருத்துவர்கள் வயிற்றுப்பகுதியில் அறுவை சிகிச்சை ஒன்றை மேற்கொண்டானர்கள்.
அப்போது அவரது மலக்குடலுக்குள் 30 முதல் 40 சென்றிமீற்றர் நீளமுள்ள மீன் ஒன்று முழுமையாக இருப்பதைக் கண்ட மருத்துவர்கள் அதை அகற்றினார்கள். அதன் பின்னர் அவரிடம் கேட்ட போது, தான் தவறுதலாக அந்த மீன் மீது உட்கார்ந்து விட்டதாகவும், அது ஆசன வாய் வழியாக உள்ளே சென்று விட்டதாகவும் கூறினார். அந்த நபர். தானே அந்த மீனை எடுக்க முயன்றதாகவும், தன்னால் முடியவில்லை என்பதால் தான் மருத்துவமனைக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மருத்துவர்களாலும் அதை ஆசன வாய் வழியாக எடுக்க முடியாததால் தான், அவரது வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து அதை எடுக்க வேண்டியதாக உள்ளது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.