கொரோனா வைரஸ் தொற்று இல்லாத நாடாக மாறிய 9 நாடுகள்..!
நியூசிலாந்து, தான்சானியா, வாடிகன் உட்பட 9 நாடுகள் உயிரைக் குடிக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லாத நாடுகளாக காணப்படுகின்றன. நியூசிலாந்தில் இப்போதைக்கு கொரோனா வைரஸ் நோயாளிகள் இல்லை என்பதால் 7 வாரங்களாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது. அதேநேரம் ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் 509 பேர் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அந்நாடு கொரோனா வைரஸ் இல்லாத நாடாக மாறியுள்ளதாக அதிபர் ஜான் மகுபூலி அறிவித்துள்ளார்.
வாடிகனில் ஜூன் 6 ஆம் திகதி நிலவரப்படி 12 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்கள் அனைவரும் குணமடைந்துள்ளனர். அதேநேரம் ஃபிஜி, மான்டிநெக்ரோ, செசெல்ஸ், செயின்ட் கிட்ஸ் நெவிஸ், திமோர், பப்புவா நியூகினியா ஆகிய நாடுகளும் கொரோனா வைரஸ் இல்லாதவையாக மாறியுள்ளன.