யேமனில் சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் நடத்திய வான் தாக்குதலில் 32 பேர் பலி..!!
யேமனில் சவுதி அரேபியா தலைமையிலான அரபு நாடுகளின் கூட்டுப்படைகள் நடத்திய வான் தாக்குதலில் 32 பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். யேமனின் அல்ஜவாப் மாகாணத்தில் மேற்கொண்ட இந்த தாக்குதலில் மேலும் 12 பேர் காயமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இது போன்ற நிலையில், குறித்த வான் தாக்குதலை நடத்திய போர் விமானத்தை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் யேமன் அரச படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் உள்நாட்டு போர் நடைபெற்று வருகின்றது. மேலும் இந்த உள்நாட்டுப்போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் தனது முழு ஆதரவையும் வழங்கி வருகின்றது. அதே நேரத்தில், யேமன் அரச படையினருக்கு சவுதி கூட்டுப்படையினர் ஆதரவு வழங்கி தொடர்ந்தும் அங்கு தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர். இந்த உள்நாட்டு போரினால் இதுவரை 1000க்கு மேற்பட்ட பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது