50 நாட்களாக சீனாவை ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ்..!
50 நாட்களாக சீனாவை புரட்டி எடுக்கும் கொடிய உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,770க்கு அதிகமாக தாண்டியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. அதிலிருந்து வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு 50 நாட்கள் ஆகும். இந்த நிலையில் சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. இந்த வைரஸால் 71000க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 1,775 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் புதிதாக ஒரே நாளில் மட்டும் 1,933 பேர் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். 3வது நாளாக வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சரிந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. இந்த வைரசின் தீவிரம் எதிர்வரும் நாட்களில் எவ்வளவு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என கண்டறிய முடியிவில்லை என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் ஜிபிரேயேசஸ் தெரிவித்துள்ளார்.