பத்திரிக்கை நிறுவனத்தில் துப்பாக்கிச் சூடு ஐவர் பலி இருபது பேர் நிலைமை கவலைக்கிடம்!
அமெரிக்காவின் மேரிலாண்ட் மாநிலத்தை உள்ள பிரபல செய்திப் பத்திரிகை நிறுவனமான கேப்பிட்டல் கேசட் வளாகத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளதுடன் மேலும் 20 பேரின் நிலைமையானது கவலைக்கிடமான நிலைமையில் உள்ளதாக அமெரிக்கச் செய்திக்கு குழுக்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 30 வயதான வெள்ளை நிற மனிதர் ஒருவர் கைது செய்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் அந்த நபரினுடைய பெயர் ஜெரோட் டபிள்யு ரெமோஸ் என்பதுவும் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் தன்னுடன் பெரிய ரக துப்பாக்கி மற்றும் கிரானைட் குண்டுகளை வைத்திருந்ததையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அத்தோடு இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் அவர்கள் மேலும் கூறியுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் குறித்த பத்திரிக்கை நிறுவனத்தில் பணிபுரியும் செய்தியாளர் குறிப்பிட்ட நேரத்திற்குள் நிறுவனத்திற்குள் நுழைந்த தாக்குதல்தாரி சராசமாரியாக சுட்டு ஐவர் அந்த இடத்திலேயே இறந்துபோயுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இறந்த ஐவரும் அந்தப் பத்திரிக்கை நிறுவனத்தின் பிரதான பொறுப்பில் உள்ளவர்கள் என்பதுவும் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திலிருந்த ஏனையவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதுடன் மேசைக்கடியில் ஒளிந்திருந்த தாக்குதல்தாரி உடனடியாக கைதுசெய்யவும்பட்டுள்ளார்.
மேலும் அண்மைக்காலத்தில் அந்த பத்திரிக்கை நிறுவனத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து இடம்பெற்ற இச் சம்பவமானது ஊடக சுதந்திரத்திற்கான அச்சுறுத்தலாகவே அமைகின்றது.