சந்தையில் ஏற்றப்பட்ட கோரத் தீ விபத்தில் 15 பேர் உயிரிழப்பு
.
கென்யாவின் தலைநகரான நைராபியில் உள்ள க்வாம்பாவோ என்னும் பிரதேசத்திலுள்ள கிகொம்போ மார்க்கெட்டில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 15 பேர் அநியாயமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த தீ விபத்தில் சிக்குண்டு காயமடைந்தவர்கள் ஐவர் கென்யாட்டா தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர். இவர்களில் நான்கு பேர் சிறு குழந்தைகள் என்பது கவலைக்கிடமான விடயம். அத்தோடு தீவிபத்தில் உயிரிழந்த ஏனையவர்களின் உடல் மம லுச்சி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
விபத்தில் பாதிக்கப்பட்ட ஏனைய 70 பேர் கென்யாட்டா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுக் கொண்டுள்ளனர்.
இந்தத் தீ விபத்தில் சுமார் 1000 சந்தைக் கடைகள் இருந்துள்ளன. இந்தத் தீ விபத்துக்கான காரணங்களை போலீசார் விசாரித்துவருகின்றதுடன் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான நிவாரணங்கள் வழங்கப்பட உள்ளதாகவும் நைரோபி அரசு அறிவித்துள்ளது.