அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிரான குற்றவியல் பிரேரணை…!!!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிரான குற்றவியல் பிரேரணை இந்த விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது என்று, வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் ஜனநாய கட்சியின் காங்கிரஸ் குழுவினால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் மூலமான கோரிக்கையை வெள்ளை மாளிகை நிராகரித்துள்ளது.
ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்ற ஜோ பைடன் குறித்த விசாரணைகளை மேற்கொள்ளுமாறு யுக்ரெயின் ஜனாதிபதிக்கு அழுத்தம் தெரிவித்ததாக, டொனால்ட் ட்ரம்ப் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையிலேயே அவருக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது. இருப்பினும் இந்த குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.