துருக்கிக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா…!!!
வடக்கு சிரியாவில் துருக்கி மேற்கொள்ளும் போர் நடவடிக்கைகள் குறித்து சிந்தித்து செயற்பட வேண்டும் எனவும், மீறினால் கடுமையான எதிர்நடவடிக்கை எடுப்போம் என்றும் அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிரியாவில் குர்திஷ் போராளிகள் கட்டுப்பாட்டிலுள்ள இடங்களில் துருக்கி இராணுவம் தீவிரவாத தாக்குதல்களை தொடங்கியுள்ளது. இதில் அப்பாவி பொது மக்கள் உட்பட இதுவரை 40 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான், சிரியா ஆகிய நாடுகளிலுள்ள அமெரிக்க இராணுவ வீரரகளை திரும்ப பெறப் போவதாக கடந்த ஞாயிறன்று ஜனாதிபதி டிரம்ப் கூறினார். அதை தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளது.
மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. துருக்கியின் பொருளாதாரத்தை முற்றிலும் அழித்துவிடுவோம் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.