சவுதி அரேபியாவில் ஏற்பட்ட கோர விபத்து..! 35 பேர் பலி..!!
சவுதி அரேபியாவில் கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். சவுதியில் Al-Akhal கிராமத்திற்கு அருகே Madinah-வில் இருந்து 170 கி.மீ தூரத்தில் உள்ள Hijra சாலையில் இரவு 7 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது.
பேருந்து லொறி மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பேருந்தில் 39 பயணிகள் பயணம் செய்துள்ள நிலையில் ஆசிய மற்றும் அரபு நாடுகளை சேர்ந்த 35 பேர் உயிரிழந்ததுடன் 04 பேர் படுகாயம் அடைந்த நிலையில் Al-Hamna வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் இந்த சம்பவத்தை தொடர்பில் சவுதி ரெட் கிரசண்ட் ஆணையம் மற்றும் பிற அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு வந்து மீடபு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் விபத்து தொடர்பாக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு சவுதி இளவரசர் இரங்கல் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.