ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டு தாக்குதல் தொடர்பாக அமெரிக்க ராஜாங்க செயலாளர் வெளியிட்ட கருத்து..!!
ஆப்கானிஸ்தான் நங்கஹார் மாகாணத்தில் குண்டுத் தாக்குதல் நடந்துள்ளது. இந்த சம்பவத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்படுகின்றது. அதோடு உயிரிழந்தவரின் சடலங்களை தேடும் பணியில் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் சுதந்திரத்தையும், நிரந்தர சமாதானத்தையும் உருவாக்கிவதில் அமெரிக்கா அர்ப்பணிப்புடன் செயல்படும் என அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.
இது போன்ற கொடூரமான தாக்குதல்களை முறியடிக்க ஆப்கானிஸ்தான் மக்களுடன் ஒன்றிணைந்து அமெரிக்கா நல்ல முறையில் செயல்படும் எனவும் அவர் தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை பிரார்த்தனையில் மேற்கொண்ட போது நடந்த குண்டு தாக்குதலில் 69 பேர் உயிரிழந்ததுடன் 50 இற்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தனர்.
மேலும் இதை விட பல சடலங்கள் இடிபாடுகளுக்கு இடையே சிக்குண்டுள்ளதாக மீட்பு பணியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.