பிரித்தானியாவில் பொதுத்தேர்தலை நடத்த புதிய யோசனை ஒன்றை முன்வைக்கவுள்ள பிரதமர் பொரிஸ் ஜொன்சன்…!!!!
பிரித்தானியாவில் பிரதமர் பொரிஸ் ஜொன்சன் அந்நாட்டில் பொதுத்தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான புதிய யோசனை ஒன்றை முன்வைக்கவுள்ளர். இந்த தகவலை பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
முன்னரே அவர் 3 தடவைகள் இதற்கான யோசனை முன்வைக்கப்பட்ட போது, அந்த நாட்டின் நாடாளுமன்றம் அந்த யோசனையை நிராகரித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்துவதற்கு அனுமதி கேட்டு, ஒருபக்க யோசனை ஒன்றை அவர் நாடாளுமன்றில் முன்வைக்க விருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கு குறைந்த எண்ணிக்கையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவே போதும் என்று கூறப்படுகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான கால எல்லை அடுத்த வருடம் ஜனவரி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிலையிலேயே பொதுத்தேர்தலை நடத்துவதற்கு பொரிஸ் ஜோன்சன் முயற்சித்து வருகிறார்.