குழந்தை பெற்ற போது சுயநினைவை இழந்த மனைவியை அன்பால் பழைய நிலைக்கு மீட்டெடுத்த கணவன்…!!!
உலக அளவில் விலை மதிப்பற்றது அன்பு. இந்த அன்பு திடீர் திடீர் என்று யார் மீது என்றாலும் ஏற்படும். இந்த உலகத்தில் பிறந்த அனைத்து உயிர்களின் உயிர் சுவாசமே அன்பு என்று கூறலாம். அன்பு என்ற ஆயுதத்தைக் கொண்டு எதை வேணும் என்றாலும் சாதிக்கலாம். அந்த வகையில் குழந்தை பெற்ற வேளையில் தனது சுயநினைவை இழந்த மனைவியை பழைய நிலைக்கு அன்பால் மீட்டெடுத்த கணவனின் செயல் செயலால் அமெரிக்க வாசிகள் முழுவதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் மெக்சிகன் மாகாணத்தை சேர்ந்த ஸ்டீவ் கர்டோ ((steve curto)), கேம்ரே ((camre)) தம்பதியினர்.
திருமணமாகி சில காலத்திற்கு பிறகு கேம்ரே கர்ப்பம் அடைந்த நிலையில் பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். ப்ரீக்லாம்ப்சியா என்னும் நோயால் பாதிக்கப்பட்டிருந்த கேம்ரே மூளையில் ஏற்பட்ட பாதிப்பால் நினைவுகளை இழந்தார். கடந்த கால நினைவுகளை இழந்த நிலையில் தனது மகனையும் ஈன்றெடுத்தார்.
மேலும் கேம்ரேவின் இந்த நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்த நிலையில் தன் மகனோடு சேர்த்து இன்னுமொரு குழந்தையாக மாறிப் போன மனைவி கேம்ரேவை நினைத்து இரத்தக் கண்ணீர் வடித்தார். ஸ்டீவ்கர்டோ. 30 நாட்கள் தன் மனைவியும் 36 நாட்கள் மகனும் வைத்தியசாலையில் இருந்த நிலையில் வீட்டிற்குகூட்டி சென்றுள்ளார். இதனால் கேம்ரேவின் நிலை மிகவும் கவலைக்குரியதாக மாறி போய் இருந்தது. பல் தேய்ப்பது எப்படி, உடை அணிவது எப்படி, அன்றாட பணிகள் செய்வது எப்படி என எதுவுமே தெரியாமல் பச்சிளம் பிள்ளையாக கேம்ரே முற்றிலும் மாறியுள்ளார்.
ஸ்டீவ் தனது மகனோடு,மனைவிக்கும் தாயாக மாறி பணி விடைகள் செய்து நாட்களை கழித்து வந்துள்ளார். ஸ்டீவ் கர்டோ… கணவர் யார் என்று ஞாபகம் இல்லை, இருப்பினும் அவரது அன்பில் உறைந்து போன கேம்ரே உதிர்த்த வார்த்தைகளை இன்று வரை கூறி சிலாகித்து வருகிறார் ஸ்டீவ் கர்டோ பார்த்து `நீ யார் என்று எனக்குத் தெரியாது, ஆனால், நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று எனக்குத் தெரியும்’ என்ற கேம்ரேவின் வார்த்தைகள் தான் இன்று வரை தன்னை நகர்த்தி வருவதாக ஸ்டீவ் தெரிவித்துள்ளார்.
தனது மனைவிக்கு தாய்மை என்றால் என்ன என்றோ, அதன் மகத்துவம் குறித்து கூட தெரியவில்லை என்றும், அது தொடர்பாக மீண்டும் மீண்டும் பேசியதன் விளைவாக தற்போது மகனுக்கு சிறந்த தாயாக மாறி உள்ளதாகவும் ஸ்டீவ் கர்டோ கூறியுள்ளார்.
அன்பு அனைத்தையும் ஒரு நொடிப் பொழுது மாற்ற வல்லது என நான் இன்று உணாந்து கொண்டதாக அவர் கூறினார். அதோடு மனைவி மீது கொண்ட காதலும், அன்பும் தான் குழந்தையாய் மாறி போன ஒரு தாயை மீண்டும் மனிதராக்கி இருக்கிறது. மனைவியை காதலிப்போம் என கூறி பூரிக்கும் ஸ்டீவ் கர்டோ இன்றைய தலைமுறைக்கான ஒரு பாடமாகும்.