சிரியாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 8 பேர் உயிரிழப்பு..!!!
சிரியாவில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலில் 8 பேர் உயிரிழந்ததுடன் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். துருக்கியின் கட்டுப்பாட்டில் உள்ள சிரியாவின் வடகிழக்கு பகுதியான சுலுக் ளுரடரம நகரில் இந்த தீவிரவாத தாக்குதல் நேற்றைய தினம் இரவு நேரத்தில் நடைபெற்றுள்ளதாக சிரியா ஊடகம் கூறுகின்றன.
மேலும் இந்த தீவிரவாத தாக்குதலுக்கு இதுவரைக்கும் எந்தவொரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில் துருக்கி அரசாங்கம் குர்திஷ் போராளிகள் மீது குற்றம் சுமத்தியுள்ளனர். கடந்த வாரம் சிரியா மற்றும் துருக்கி எல்லையில் நடைபெற்ற தற்கொலை குண்டு வெடிப்பு சம்பவத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.