அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஏற்பட்ட மின் தடை…!!
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஏற்பட்ட மிகப் பெரிய அளவிலான மின் தடைபட்டுள்ளது. மேலும் இந்த மின் தடை 6 கட்டமைப்புகளில் ஏற்பட்டது இதில் இரண்டு சேவை வழக்க நிலைக்குத் திரும்பியுள்ளது. இதனை தொடர்ந்து மற்றய அனைத்து கட்டமைப்புகளின் மின் தடையை வழமைக்கு கொண்டு வரும் பணிகள் தீவிரமாக அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
மின்-மாற்றியில் ஏற்பட்ட தீயே மின்தடைக்குக் காரணமாக இருந்தாக நியூயார்க் நகரத் தீயணைப்புத் துறை தெரிவித்தது. மென்ஹேட்டன் (Manhattan) வட்டாரத்தின் பெருமளவான பகுதி அந்த மின் தடையால் பாதிக்கப்பட்டது. சுமார் 44ஆயிரம் பேர் மின்சாரம் இன்றி தவிக்கின்றனர்கள்
1.6 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டது மென்ஹேட்டன் வட்டாரம். அங்குதான் வால் ஸ்டிரீட் (Wall Street) நிதி நடுவம் அமைந்துள்ளது. உள்ளூர் நேரப்படி நள்ளிரவுக்குள் மின்சேவை முழுவதையும் வழக்கநிலைக்குக் கொண்டுவர அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.