கேக் தயாரிக்கும் போது இயந்திரத்தில் தாவணி சிக்கியதில் மகன் கண் முன்னே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்த குடும்ப பெண்..!!! பிரான்சில் நடந்த சோகம்..!
பிரான்சில் ஆவெர்க்னே-ரோன்ஸ்-ஆல்ப்ஸ் பிராந்தியத்தை சேர்ந்த 58 வயதுடைய பெண் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் தனது வீட்டில் உயிரிழந்துள்ளார். குறித்த பெண் அணிந்திருந்த தாவணி தனது 15 வயதுடைய மகனுடன் ஒன்றிணைந்து கேக் தயாரித்துக் கொண்டிருந்த போது உணவு கலவையில் சிக்கிக் கொண்டுள்ளதாக தீயணைப்பு வீரர்கள், பொலிஸார் கூறியுள்ளனர்.
அச்சம் அடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சிறுவன் உடனடியாக அவசரகால சேவைகளுக்கு அழைப்பு மேற்கொண்டான். எதிரில் பேசிய அதிகாரி, சாதனத்தின் சுவிட்சை OFF செய்து விட்டு தாயின் தாவணியை வெட்டும் படி கூறியுள்ளார்.
பின்னர் வீட்டிற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், ஆம்புலன்ஸ் குழுவினர் பாதிக்கப்பட்ட பெண்ணை காப்பாற்ற தீவிர முயற்சி எடுத்துள்ளனர். ஆனால் அந்த முயற்சிகள் அனைத்தும் பயணிக்காத நிலையில் அவர் பரிதாபமாக பலியானார்.
தாய் மற்றும் மகன் ஆகிய இருவரும் சமையல் அறையில் கேக் தயாரிக்கும் போது இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. சாதனத்தின் உருவாக்கம் மற்றும் மாதிரி தெளிவாக இல்லை. மேலும் இந்த சம்பவத்தின் ஒரே சாட்சியான, பாதிக்கப்பட்ட பெண்ணின் மகன், என்ன நடந்தது என்பதை பொலிஸ் அதிகாரிகளுக்கு கூறியுள்ளார். எனினும் மரணத்திற்கான துல்லியமான காரணத்தை உறுதிப்படுத்த அதிகாரிகள் பிரேத பரிசோதனை மேற்கொள்ளவுள்ளனர்.