புல்புல்’ சூறாவளியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!!
பங்களதேஷை புரட்டி எடுத்த ‘புல்புல்’ சூறாவளியினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளதுடன் 2 மில்லியன் பேர் இடம்பெயர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 09 ஆம் திகதி தொடக்கம் இந்த புல்புல் சூறாவளியானது பங்களதேஷின் கரையோரங்களில் வீசியுள்ளது.
புல்புல் சூறாவளியால் தொடர்ச்சியாக பெய்து வந்த மழைக்காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, மண்சரிவு போன்ற அனர்த்தங்களால் மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 4 000ற்கு மேற்பட்ட வீடுகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது. மேலும் இது போன்ற நிலையில் பங்களதேஷின் பாதுகாப்பு பிரிவினர் தொடர்ந்தும் மீட்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.