சவுதி அரேபியாவிற்கு வேலைக்காக செல்லும் இந்தியா, இலங்கையில் இருந்து செல்வோருக்கு தொழில்முறை தேர்வு நடத்த சவுதி அரசாங்கம் தீர்மானம்..!!!
இலங்கை, இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து வேலை தேடி செய்வோருக்கு தொழில்முறை தேர்வு நடத்த சவுதி அரேபியா அரசு தீர்மானித்துள்ளது. இந்த இரு நாடுகளில் உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது. சவுதி அரேபியாவில் அதிக எண்ணிக்கை கொண்ட வெளிநாட்டவர்களான இந்தியர்களுக்கு முதல் கட்டமாக தொழில்முறை தேர்வு நடத்த முடிவு தீர்மானித்துள்ளது.
அண்மையில் வேளையில் செய்பவருக்கும் இனி சவுதி அரேபியாவில் தொழில் தேடி வருகின்றவருக்கும் இந்த தேர்வு நடத்தப்படும். தொழிலாளர் விசா என்ற பிரிவை ரத்து செய்யவும் சவுதி அரேபியா தீர்மானித்துள்ளது. இதனால் அனுபவமற்ற தொழிலாளர்களை நீக்கி தொழில்துறையை புதிய கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும் என சவுதி அரசாங்கம் நம்புகிறது.
சவூதி அரசாங்கம் ஆரம்பத்தில் சோதனை முறையிலும் பின்னர் படிப்படியாக அதை கட்டாயமாக்கவும் அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் தரப்பு கூறியுள்ளது. சவுதி அரசாங்கத்தின் இந்த புதிய கொள்கை தீர்மானத்தால் இந்தியா, இலங்கையர்கள் உள்ளிட்ட குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் இலட்சக்கணக்கிலான வெளிநாட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
சவுதி அரேபியாவில் மொத்தம் 7.18 மில்லியன் வெளிநாட்டவர்கள் இருக்கின்றனர். அதில் 3.1 மில்லியன் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு போதிய தொழில்முறை ஆவணங்கல் இல்லை என தெரிவிக்கப்படுகிறது. சவுதி அரேபியாவின் தொழில்முறை தேர்வானது இந்தியா, இலங்கை, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, எகிப்து, வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் நாட்டவர்களுக்கு கட்டாயமாக்கப்படும் என கூறப்படுகிறது.
சவுதி அரேபியாவில் பணியாற்றும் தொழிலாளர்களில் 95 விழுக்காடும் இந்த 7 நாடுகளிலிருந்து வந்தவர்கள் என அரசு தரப்பு கூறியுள்ளது. இந்திய தொழிலாளர்களுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் தேர்வு நடத்தப்படும். 2020 மே மாதம் பிலிப்பைன்ஸ் நாட்டவர்களுக்கும் ஜூலை மாதம் இலங்கை, இந்தோனேசியா மற்றும் எகிப்தியர்களுக்கும் தேர்வு நடத்தப்படும்.
வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் நாட்டவர்களுக்கு 2021 டிசம்பர் மாதம் தேர்வு நடத்தப்படும் என அதிகாரிகள் தரப்பு கூறியுள்ளது. இந்த தேர்வுகளுக்கு உள்ளூர் பணத்தில் 400 முதல் 500 ரியால் வரை ஈடாக்கப்படும் என கூறியுள்ளது.