சிங்கப்பூரில் நங்கூரமிட்டு சொகுசுக் கப்பலில் நோய்வாய்ப்பட்ட 229 பேர் சிகிச்சை வழங்கல்..!!!
தாய்லந்தில் இருந்து வியட்நாம் பயணித்துக் கொண்டிருந்த சொகுசுக் கப்பலில் 229 பேர் நோய் வாய்ப்பட்டதைத் தொடர்ந்து கப்பல் சிங்கப்பூரில் நங்கூரமிட்டு கப்பலில் பயணித்த பயணிகள் இங்கு சிகிச்சைப் பெற்றதாகத் கூறப்பட்டுள்ளது.
குறித்த பயணிகள் வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டதாக சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம், சுகாதார அமைச்சு, சிங்கப்பூர் உணவு அமைப்பு போன்றவை கூறியுள்ளன. கடந்த புதன்கிழமை சிங்கப்பூரில் MV Sun Princess கப்பல் நங்கூரமிட்டது.
நோய் வாய்ப்பட்டவர்களில் 189 பேர் குணம் அடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 16 பேர் தங்கள் கப்பல் பயணத்தை சிங்கப்பூரில் முடித்துக்கொண்டனர். Norovirus கிருமித் தொற்றால் பயணிகள் நோய் வாய்ப்பட்டதாக சுகாதார அமைச்சு CNA இடம் தெரிவித்த நல்ல சுகாதாரப் பழக்கங்களினால் கிருமித் தொற்றைக் கட்டுப்படுத்த முடியும் என்று கூறப்பட்டது.