பொலிவியாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 8 பேர் உயிரிழப்பு..!!!
பொலிவியாவில் இடைக்கால ஜனாதிபதி ஜீனைன் ஏனெஸை பதவி இருந்து விலகுமாறு கோரி விடுக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட நிலையில் அவர்கள் மீது அந்தநாட்டு பாதுக்காப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 14 வருடங்களாக பொலிவியாவின் ஜனாதிபதியாக ஈவோ மொரலஸ் பதவி வகித்த வந்த நிலையில் அங்கு அன்மையில் நடைபெற்ற தேர்தலிலும் அவரே வெற்றி பெற்றுள்ளார்.
இருப்பினும் இந்த தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறி தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் அவர் பதவி விலகியிருந்தார். மேலும் இது போன்ற நிலையில் தன்னை பொலிவியாவின் இடைக்கால ஜனாதிபதியாக ஜீனைன் ஏனெஸ் அறிவித்துக் கொண்டார். அவரை பதவி விலகுமாறும், விரைவில் ஜனநாயக தேர்தல் ஒன்றை நடத்துமாறு கோரியும் தொடர்ந்தும் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகின்றனர்.