பிரித்தானியா தம்பதியினர் 4 நிமிடத்தில் 4 குழந்தை பெற்றெடுத்த அதிசயம்..!!!
பிரித்தானியாவை சேர்ந்த சியாரா ஃப்ளின் என்ற பெண்ணுக்கு இளம் வயதிலேயே பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் இருப்பது கண்டறியப்பட்டதால், ஹார்மோன்களை தூண்டுவதற்காக ஊசிகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்.
இப்படி இருந்தாலும் அவருக்கு கரு ஊறுவதற்கு வாய்ப்பு இல்லாததால் ஐ.வி.எஃப்-ஐப் முறையை பயன்படுத்த தொடங்கியுள்ளார். அதனை தொடர்ந்து கர்ப்பமடைந்த சியரா 8 மாத கர்ப்பிணியாக இருந்த போது கடந்த 23 ஆம் திகதி அன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு சியாரா – ஷேன் மாகி தம்பதியினருக்கு காலை 9.19 மணி முதல் காலை 9.23 மணி வரை டப்ளினில் உள்ள கூம்பே மருத்துவமனையில் மூன்று பெண்கள் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை போன்ற 4 குழந்தைகளையும் அறுவை சிகிச்சை மூலம் பெற்றெடுத்தார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள சியாரா, தனது வாழ்க்கை திடீரென்று மிகவும் பரபரப்பாகி விட்டது என கூறியுள்ளார்.