வட கொரியா ஏவிய ஏவுகணை தொடர்பாக உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்த ஜப்பான்…!!!
இன்றைய தினம் (28) அடையாளம் தெரியாத ஏவுகணையை வட கொரியா ஏவியுள்ளதாக தென் கொரியா இராணுவம் குறிப்பிட்டுள்ளது. ஏவுகணைகள் அதன் கிழக்கு மாகாணத்தில் இருந்து கடலில் ஏவப்பட்டதாக தென் கொரியா குறிப்பிட்டுள்ளது.
வட கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான அணுசக்தி மயமாக்கல் பேச்சு வார்த்தையில் முன்னெடுத்துள்ள நிரையில் ஒப்பந்தத்தை முடிக்க வருட இறுதி காலக்கெடு உள்ள நிலையில் வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை முன்னெடுத்துள்ளது.
வட கொரியாவால் ஏவப்பட்ட ஏவுகணை என்பதைக் கண்டுபிடித்ததாகவும் அது எங்கு தரையிறங்குகிறது என்பதைக் கண்காணித்து வருவதாகவும் ஜப்பானின் கடலோர காவல்படை தெரிவித்தார். இருப்பினும், ஏவுகணை அதன் வான்வெளியில் அல்லது அதன் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்குள் நுழையவில்லை என்று பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. வட கொரியாவின் ஏவுகணை ஏவுதல் ஜப்பானுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் அச்சுறுத்தல் என்று ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜப்பான் பிரதமர் தெரிவித்ததாவது, வட கொரியாவால் பல ஏவுகணைகள் ஏவப்பட்டது ஜப்பானுக்கு மட்டும் இன்றி சர்வதேச சமூகத்திற்கும் கடுமையான சவால் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிலைமையை கண்காணிக்க அமெரிக்கா, தென் கொரியா மற்றும் சர்வதேச சமூகத்துடன் ஜப்பான் நெருங்கிய தொடர்பில் இருக்கும், ஜப்பானிய மக்களின் பாதுகாப்பு மற்றும் சொத்துக்களைப் பாதுகாக்க எங்கள் விழிப்புணர்வை அதிகரிப்போம் என அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே கூறியுள்ளார்.