அமெரிக்காவுடன் சமாதான பேச்சு வார்த்தை தொடரவுள்ள தலிபான்…!!!!
தலிபான் அமெரிக்காவுடன் சமாதான பேச்சு வார்த்தையை மீள தொடங்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. கடந்த நாட்களாக அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் ஆப்கானிஸ்தானுக்கு பயணம் முன்னெடுக்கும் நிலையில் தலிபான்களின் அறிவிப்பு நேற்றைய தினம் வெளி வந்துள்ளது.13,000 அமெரிக்க படையினரும், 1000 நேட்டோ படையினரும் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ளனர்.
அங்கு நடைபெற்று வருகின்ற சண்டைகள் காரணமாக, 2 ஆயிரத்து 400 அமெரிக்க சேவை உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.