காட்டு மானால் பறி போன 5 வயது சிறுவனின் உயிர்..!!! கனடாவில் நடந்த சோகம்…!!
வீதியில் பயணித்த கார் ஒன்று காட்டு மானுடன் மோதி விபத்து ஏற்பட்டதில் சிறுவன் ஒருவர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 17 ஆம் திகதி கனடாவில் Quebec மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலையில் 2 மணி அளவில் கார் ஒன்று பயணித்துக் கொண்டிருந்த வேளையில் வீதியில் நடுவே காட்டு மான் ஒன்று வந்ததால் ஓட்டுனர் வேகமாக பிரேக் போட்டு வண்டியை நிறுத்தினார்.
அந்த வேளையில் 05 பேருடன் வந்த வேறு ஒரு காரும் காட்டுமான் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தின் போது காரில் இருந்த 05 வயதுடைய ஜக்கீல் என்ற சிறுவனும் அவன் சகோதரி 2 வயதுடைய அடிலீ உட்பட 05 பேரும் படுகாயமடைந்தனர். அதைத் தொடர்ந்து அவர்களை மருத்துவமனையில் சிகிர்ச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் ஜக்கீல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
அதில் அடிலீ இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாள். அதன் இடையில் பிரேத பரிசோதனை முடிந்து ஜக்கீல் சடலத்துக்கு இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. நேற்றைய தினம் தேவாலயத்தில் அவன் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் ஜக்கீலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். ஜக்கீல் தொடர்பாக அவன் தாத்தா மைக் தெரிவிக்கையில், இன்று எல்லோரும் பச்சை நிறத்தில் ஆடையை அணிந்துள்ளோம். அதற்கு காரணம் அவனுக்கு பச்சை நிறம் மிகவும் பிடிக்கும்.
மேலும் இந்த சிறு வயதிலேயே அவனுக்கு நகைச்சுவை திறன் அதிகமாக இருந்தது, ஹாக்கி விளையாட்டிலும் அதிக ஈடுபாட்டு வந்துள்ளான். ஜக்கீல் உயிரிழந்தாலும், அவனுடைய நினைவுகள் எங்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.