ஹொங்கொங் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இன்றும் பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம்..!!!
இன்றைய தினம் பொலிஸார் ஹாங்காங்கில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்காவின் ஆதரவை பெறும் நோக்கில் அங்குள்ள அமெரிக்க துணை தூதுவராலயத்தை நோக்கி பயணித்துள்ளனர்.
கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில், ஒவ்வொரு நாளும் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.