நடுவானில் விமானம் பறந்துக்கொண்டிருந்த போது காலில் ஏதோ குத்தியதில் வலியால் துடி துடித்த இளம் பெண்..!! பின்னர் காத்திருந்த பேரதிர்ச்சி..!!
யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த பெண் பயணி ஒருவர் திடீரென வலியால் துடி துடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவிக்கையில், கடந்த 05 ஆம் திகதி வியாழக்கிழமை காலை சான் பிரான்சிஸ்கோவிலிருந்து அட்லாண்டா செல்லும் விமானத்தில் பயணித்தேன். நடுவானில் விமானம் பறந்துக் கொண்டிருந்த வேளையில் எனது காலில் எதோ குத்தியது போல் உணரத் தொடங்கினேன், தொடர்ந்து குத்திக்கெண்டே இருந்ததால் பயங்கரமாக வலி ஏற்பட்டது, உடனே கழிவறைக்கு சென்றேன். அப்போது உயிருடன் தேள் ஒன்று எனது உடையில் இருந்து வெளியேறியது, இறுதியில் விமான பணிப்பெண்கள் அதை பிடித்தனர் என தெரிவித்தார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் யுனைடெட் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது, சான் பிரான்சிஸ்கோவிலிருந்து அட்லாண்டாவுக்கு பயணித்த விமானத்தில் எங்கள் பயணிகளில் ஒருவரை தேள் கடித்துள்ளது. விமானக்குழுவினர் உடனடியாக முதலுதவி வழங்கியுள்ளனர்.
அட்லாண்டாவில் தரையிறங்கியதும், பாதிக்கப்பட்ட பெண் பயணி உள்ளுர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவர் நலமாக உள்ளார் என விமான நிறுவனம் தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.