ஹொங்கொங்கில் மீண்டு அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பட்டம்..!!
ஹொங்கொங் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி ஜனநாயக இயக்கத்தினால் இந்த ஆர்ப்பாட்டம் ஹொங்கொங்கின் மத்திய பூங்காவில் நடத்தப்பட்டுள்ளது. ஹொங்கொங்கில் எதிர்கட்சியான ஜனநாயக அமைப்பினரால் தொடர்ந்து 06 மாத காலமாக இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் அதை இன்னும் அதிகம் தூண்டும் வகையில் வார இறுதியில் பல்லாயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று திரண்டு தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்போர் கருப்பு நிறக்கொடிகளையும், பதாகைகளையும் ஏந்திய வண்ணம் அமைதியான முறையில் தமது எதிர்ப்பை தெரிவித்தனர். கடந்த காலத்தில் நடைபெற்ற ஆர்பாட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக விசாரணைகள் நடைபெற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். அதே வேளையில் இந்த அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் எதிரொலியாக அங்கு அண்மையில் நடைபெற்ற மாவட்ட சபை தேர்தலில் எதிர்கட்சி பாரிய பலத்தை பெற்றிருந்தத்து.