விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட மறு கணமே அவசர அவசரமாக திரும்பிய விமானம்…!!!
விமானத்தில் வயது முதிர்ந்த ஒரு தம்பதியினரின் நெருங்கிய உறவினர் இறந்துவிட்டதாக சோக செய்தி வந்ததை தொடர்ந்தும் அவசரமாக விமானம் திரும்பியுள்ளது.
நேற்றைய தினம் ஹாங்க்சோவில் இருந்து சான்யாவிற்கு ஓடுதளத்திலிருந்து சீனாவில் ஹைனான் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டுள்ளது. அப்போது வயது முதிர்ந்த கணவன் மற்றும் மனைவிக்கு நெருங்கிய உறவினர் ஒருவர் உயிரிழந்து விட்டதாக செய்தி கிடைத்துள்ளது. இதனால் அந்த தம்பதியினர் இருவரும் பெரும் கவலையடைந்து விமானத்தை மீண்டும் திரும்புமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அங்கு இருந்த பணிப்பெண், வயதான தம்பதியினரை சமாதானம் செய்ததோடு, விமான ஓட்டிக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.
உடனடியாக விமானம் புறப்படும் வாயிலுக்குத் திரும்பியது. அங்கு வயதான தம்பதியினர் கவனமாக இறங்கி வேறு பயண ஏற்பாடுகளைச் செய்தனர். 50 நிமிட தாமதத்திற்குப் பின்னர் மீண்டும் விமானம் அங்கிருந்து புறப்பட்டுள்ளது.