ரஷ்யாவிற்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்க ஜனாதிபதி..!!!
எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்யா தலையீடு செய்ய முயற்சிப்பதற்கு எதிராக அந்நாட்டு ஜனாதிபதி டோனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்றைய தினம் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிகாரிகளுக்கும், ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லெவ்சோவுக்கும் ளுநசபநல டுயஎசழஎ இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது அவர் இந்த எச்சரிக்கையை விடுத்ததாக கூறப்படுகிறது.
ரஷ்யாவிற்கும், யுக்ரேனுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். டோனால்ட் டிரம்பிற்கு எதிரான குற்றவியல் பிரேரணை மீதான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.