எதிர்வரும் 24 ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்க அதிபர்..!!
எதிர்வரும் 24ஆம் திகதி இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்த விஜயத்தில், அமெரிக்க அதிபருடன் அவரின் பாரியார் மெலனியா டிரம்ப் மகள் இவாங்கா ட்ரம்ப், ட்ரம்பின் மருமகன் ஜார்ட் குஷ்னர், அமெரிக்க அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த நிலையில் இதன் போது இவர்கள் குஜராத்தில் ஒரு நாளும், டெல்லியில் ஒரு நாளும் தங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 36 மணிநேரத்தை இந்தியாவில் செலவிடும் ட்ரம்ப் அகமதாபாத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்றபின், ஆக்ராவிலுள்ள தாஜ்மஹாலுக்குச் செல்லவும் திட்டமிட்டுள்ளார். இருப்பினும் டொனால்ட் ட்ரம்ப்பின் ஆக்ரா பயணத்தின் போது உடன் பிரதமர் மோடி செல்வாரா என்று கேள்வி எழுந்தது. அதற்கு மத்திய அரசு அதிகாரி ஒருவர், ஆக்ராவிலுள்ள தாஜ்மஹாலுக்கு அமெரிக்க டொனால்ட் ட்ரம்ப், அவரின் மனைவி மற்றும் குடும்பத்தினர் மட்டுமே செல்வார்கள்.
அப்போது இந்தியாவின் சார்பில் உயர் அதிகாரிகள் யாரும் அவர்களுடன் செல்லமாட்டார்கள். அது மட்டுமல்லாமல் தாஜ்மஹால் என்பது, அன்பு, காதல் ஆகியவற்றின் சின்னமாகப் பார்க்கப்படுகிறது. அந்த இடத்தில் அமெரிக்க அதிபரின், அவரின் மனைவி மட்டுமே செல்வார்கள். அங்குப் பிரதமரோ அல்லது இந்திய அரசின் சார்பில் உயர் அதிகாரிகளோ யாரும் செல்லமாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.