ஈரான் எல்லைப் பகுதியில் இன்று 5.7 ரிச்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம்..!!
இன்றைய தினம் தென்கிழக்கு துருக்கியின் ஈரான் எல்லைப் பகுதியில் 5.7 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் 08 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இந்த பாரிய நிலநடுக்கத்தால் 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அவர்களில் 3 குழந்தைகளும் அடங்குவதாக கூறப்பட்டுள்ள நிலையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி சுமார் 21 பேர் படுகாயமடைந்துள்ளனர். அதைத் தொடர்ந்து இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களையும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களையும் மீட்கும் பணிகளில் மீட்பு படையினரும் பொலிஸாரும் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.