மலேசியாவில் உறங்கிக் கொண்டிருந்த தனது கணவனை கத்தியால் வெட்டிய இலங்கை மனைவி…!!!
இலங்கையைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மலேசியாவில் பணியாற்றி வந்த நிலையில் இலங்கையைச் சேர்ந்த இளம் பெண்ணொருவரை திருமணம் செய்து மலேசியாவில் வசித்து வந்தார்.நேற்று அதிகாலையில் உறங்கிக் கொண்டிருந்த தனது கணவனை மனைவி ஈன இரக்கம் இன்றி கொடூரமாக கத்தியால் வெட்டியுள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் அவர்களின் வாடகை வீட்டில் இடம்பெற்றுள்ளது.
இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் வந்தார். மனைவியின் தாக்குதலால் படுகாயம் அடைந்த இலங்கையை சேர்ந்த நபரை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் இந்த சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட கத்தியை பொலிஸார் சம்பவ இடத்தில் இருந்து மீட்டார்.
கணவனை கத்தியால் வெட்டிய மனைவியை பொலிஸார் விசாரித்து வருகின்றனர். அதோடு அவரும் இலங்கை பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயங்களுக்குள்ள கணவன் மிகவும் ஆபத்தான நிலையில் Raja Permaisuri Bainun வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 326 மற்றும் உள்நாட்டு வன்முறைச் சட்டம் 1994 இன் பிரிவு 18 ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.